ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடந்த சோக சம்பவம் : 2 பேர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை அருகே உள்ள சூலூர் பி.டி.ஓ காலனி சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( வயது 40 ) சமையல்கலைஞர் (செப்)இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது .ஒரு மகன் மகள் உள்ளனர்.குடிப்பழக்கம் உடையவர். கடந்த 4மாதங்களுக்கு முன்பு இவர் ஒரு விபத்தில் சிக்கி வலது காலில் முறிவு ஏற்பட்டது.அதன் பின்னர் சமையல் தொழிலுக்கு சரிவர செல்ல முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள நம்பர் 4 வீரபாண்டி, அறிவொளி நகரை சேர்ந்தவர் சேகர். அவரது மகன் ராஜேஷ் குமார் (வயது 18)ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார்.இவர் எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்.இதைப் பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் வெறுப்படைந்து அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து இவரது தாயார் காளீஸ்வரி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.