கார் மோதி சிறுவன் பரிதாப பலி – வாலிபர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நியூஸ் ஸ்கீம் ரோட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் சந்தோஷ் ( வயது 17 )இவர் நேற்று பொள்ளாச்சி -கோவை மெயின் ரோட்டில் ஒரு பேக்கரி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் சந்தோஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது தந்தை சதீஷ்குமார் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சாந்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பொள்ளாச்சி வடக்கி பாளையம் , புதுக்காலனியை சேர்ந்த சுஜித் (வயது 22 )என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.