பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை பலியான சோகம்..

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, கனியூர் மாதப்பூர் ரோடு,குரு லட்சுமி நகரை சேர்ந்தவர் டேனியல் ராஜ். இவரது மனைவி ஜெமினா (வயது 23) இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. 8 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது .அந்த குழந்தை நேற்று பால் குடித்த பிறகு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது.மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது.. இது குறித்து ஜமீலா கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.