இருகூர் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்ற வாலிபர் மீது பைக் மோதி பரிதாப பலி..

கோவை அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 40) இவர் நேற்று கோவை இருகூர் எல் அன்டு டி பைபாஸ் ரோட்டில் மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார் .இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக பைக் ஓட்டி வந்த சூலூர் கண்ணம்பாளையம் இ.பி காலனியை சேர்ந்த பூபதி ( வயது 22) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..