புகைப்படம் எடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்… பத்திரிகை போட்டோகிராபர் யானை தாக்கி பரிதாப பலி..

கோவை : பாலக்காட்டை சேர்ந்தவர் ஏ.வி. முகேஷ் (வயது 34) இவர் பாலக்காடு மாவட்ட மாதர்பூமி பத்திரிகையின் தலைமை போட்டோகிராபராக உள்ளார். இவர் இன்று காலையில் பாலக்காடு பக்கம் உள்ள கோட்டைக்காடு பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அங்கு புகைப்படம் எடுக்க சென்றார். அங்குள்ள ஆற்றை யானைகள் கடக்கும் போது புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு யானை இவரை தாக்கியது. இதில் முகேஷ் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இவர் டெல்லியிலும் மாதர் பூமி பத்திரிகையின் தலைமை போட்டோகிராபராக பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு பாலக்காட்டில் உள்ள பத்திரிகையாளர்கள் சங்கங்களும்,கோவையில் உள்ள சீனியர் ஜெனர்லிஸ்ட் கிளப் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் சங்கங்கள் அனுதாபம் தெரிவித்துள்ளது. யானை தாக்கி பலியான புகைப்பட நிபுணர் குடும்பத்துக்கு கேரள அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..