குடும்ப தகராறில் நடந்த விபரீதம்… இளம்பெண் தீக்குளித்து தற்கொலை-3 குழந்தைகள் பரிதவிப்பு..!!

கோவை சிறுமுகையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). இவரது மனைவி சரண்யா (29). கூலி வேலை செய்த வந்தார். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவே உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் வலியால் அலறி துடித்து சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீயை அனைத்து சரண்யாயை மீட்டனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி பிரச்சினையால் 3 குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படத்தி உள்ளது.

இதேபோன்று பொள்ளாச்சி மரபேட்டை வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் (42). கூலி தொழிலாளி. அவரது மனைவி கிருத்தியா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மகேந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கிருத்தியா கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.