வியாபாரி மனைவி விஷம் குடித்து தற்கொலை..

கோவை ஒண்டிப்புதூர் நாராயணசாமி லேஅவுட் டை சேர்ந்தவர் பால்ராஜ். உருளைக்கிழங்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரோஸ்லின் (வயது 35) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களாக ரோஸ்லின் ஒருவருடன் நட்பு வைத்திருந்தாராம். இதை இவரது கணவர் பால்ராஜ் கண்டித்தார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ரோஸ்லின் கோபித்துக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் பண்டாரபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் பால்ராஜ் அவரை சமரசப்படுத்தி மீண்டும் கோவைக்கு அழைத்துவந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் ரோஸ்லின் சாணி பவுடர் கொடுத்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.