பெண்ணுக்கு பிளேடு வெட்டு – முதியவர் கைது..!

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி ( வயது 50) வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அதே பகுதியைச் சேர்ந்த எட்வின் (வயது 60) என்பவர் முன் விரோதம் காரணமாக வழிமறித்து தகராறு செய்தார் . பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த பிளேடால் தமிழ்ச்செல்வியை கழுத்து, கை ஆகிய பகுதிகளில் வெட்டினார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் எட்வின் தப்பி ஓடி விட்டார் . இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் வழக்கு பதிவு செய்து எட் வினை கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..