தேர்தல் பிரச்சார ஆட்டோ உடைத்து சேதம் – போதை ஆசாமி கைது.!!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள கோவில் மேடு, தவசி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48) ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தமிழக முற்போக்கு மக்கள் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தனது ஆட்டோவை பயன்படுத்தி வருகிறார். நேற்று கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் .காலணியில் பிரசாரத்துக்காக ஆட்டோ ஓட்டி சென்ற போது குடிபோதையில் வந்த ஒருவர் இவரது ஆட்டோவை வழிமறித்தார். அங்கிருந்த கல்லை எடுத்து ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். பின்னர் ஆட்டோவை சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டார். இதை தடுத்த ஆட்டோ டிரைவர் கண்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கண்ணன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து இடையர்பாளையம், தடாகம் ரோடு எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த அமிர்தராஜ் (வயது 29) என்பவரை கைது செய்தார். இவர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், சேதபடுத்துதல் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..