கோவை அருகே இன்று ஒற்றையானை தாக்கி முதியவர் சாவு…

கோவைதொண்டாமுத்தூர் அருகே உள்ளபோளுவாம்பட்டி வனச்சரகம் நரசீபுரம் பிரிவில் தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் பெரியசாமி தோட்டம் களத்துக்காடு பகுதியில் இன்று காலை 5 மணியளவில் விராலியூர்,இந்திரா காலனியைச் சேர்ந்த சின்னக்குட்டி (வயது 73) என்பவர் இயற்கை உபாதை கழிக்க வந்தார்.அப்போது அங்கு மறைந்து நின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை இவரை தாக்கியது. இதில்படுகாயம் அடைந்தார். இதுகுறித்து ஆல்பா குழு வனப்பணியாளர்களுக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக அங்கு வந்த வனப்பணியாளர்கள் அவரை பார்த்த போது அவர் இறந்து விட்டார்என்பது தெரிய வந்தது..இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடலை ஆம்புலன்சில்மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.