அரசு வேலை வாங்கி தருவதாக கூறி முதியவரிடம் 15 லட்சம் மோசடி..!

தேனி மாவட்டம் பெரியகுளம் ,பக்கம் உள்ள டி. கள்ளிப்பட்டி, ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 67 )இவர் தேனி பஸ் நிலையத்தில் டைம் கீப்பராக வேலை பார்த்து வருகிறார். .இவரிடம் கோவையை சேர்ந்த பாக்கியராஜ் தெரசா, கிருஷ்ணலதா, ராஜசேகர் ஆறுமுகம் ஆகியோர் அறிமுகமானார்கள்..தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகள் தெரியும். அவர்கள் மூலமாக ஆனந்தன் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு தவணைகளில் ரூ. 15 லட்சம் வாங்கினார்கள். வேலை வாங்கி  கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். இது குறித்து ஆனந்தன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் 5 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..