பெட்டிக் கடையில் குட்கா விற்ற கோவை வியாபாரி கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ,வசியபுரம் ராமசாமி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38) இவர் அங்குள்ள சீனிவாசபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யபடுவதாக பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தங்கதுரை நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 100 குட்கா பாக்கெட் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வியாபாரி சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.