வாலிபரை விபசாரத்துக்கு அழைத்த பெண், ஆட்டோ டிரைவர் கைது..!

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 31) இவர் நேற்று சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் முன்நின்று கொண்டு ஒரு பெண் விபசார அழைப்பு விடுத்தாராம். இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபசார அழைப்பு விடுத்த பச்சாபாளையத்தை சேர்ந்த உமாவதி (வயது 46) சுக்கிரார்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வம் (வயது 51) ஆகியோரை
கைது செய்தனர்.