11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பனைமரத்து பாளையத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவரை கடந்த 2021- ஆம் ஆண்டு பொள்ளாச்சி, மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த செல்வகுமார் ( வயது 27) என்பவர் ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம்.இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த குலசேகரன் குற்றம் சாட்டப்பட்டு செல்வ குமாருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பின்னர் அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர்.