கணவருடன் பைக்கில் சென்ற மனைவி தடுமாறி விழுந்து பரிதாப பலி..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மனைவி பரிதாபானு ( வயது 47 ) இவர் தனது கணவருடன் பைக்கில் நரசிங்கபுரம் ரோட்டில் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி பைக்குடன் இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பரிதாபானு இறந்தார். கணவர் முகமது இஸ்மாயில் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.