திருச்சி மாநகராட்சியில் பனையபுரம் ஊராட்சியை சேர்க்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு.!!

திருச்சி பனையபுரம் ஊராட்சியில் ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்து வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சியோடு பனையபுரம் ஊராட்சியை சேர்க்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளதால் பனையபுரம் ஊராட்சி விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒன்று கூடி பனையபுரம் ஊராட்சியை மாநகராட்சியோடு சேர்த்தால் எங்களுடைய வாழ்வாதாரமும் விவசாயமும் பாதிக்கப்படும். மேலும் எங்களுக்கு வரிவிதிப்பு அதிகமாகும். எங்கள் நிலங்கள் எல்லாம் வணிக நிலமாக மாறிவிடும். ஆகையால் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியோடு பனையபுரம் ஊராட்சியை சேர்க்க மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். என்று தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் உள்ள புகார் பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்..