புது பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஆட்டோ டிரைவருக்கு வலை.!!

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்தப் பெண் கோவையில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்ததும் கணவருடன் குனியமுத்தூரில் தனி குடித்தனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இளம்பண்ணுக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டது. இதனால் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் ஒருவர் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த புதுப் பெண் கூச்சலிட்டார். இளம் பெண்ணின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து அந்த ஆசாமியை சத்தம் போட்டனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட புதுப் பெண் தனது கணவருக்கு போன் செய்து நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரும்  உடனடியாக வீட்டுக்கு திரும்பி வந்தார். மனைவிக்கு ஆதரவாக ஆட்டோ டிரைவரை தட்டி கேட்டார். அப்போது அந்த ஆசாமி நான் இந்த பகுதியில் பெரிய ரவுடி. என்னை அனுசரித்து சென்றால் தான் நீங்கள் இங்கு நிம்மதியாக வாழ முடியும் என மிரட்டல் விடுத்து விட்டு கற்களை வீசி எரிந்த படி தப்பி ஓடி விட்டார். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதே பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கும் கார்த்திக் (வயது 30) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.