பேரூர் கோவிலுக்கு திதி கொடுக்க சென்றவர் திடீர் மரணம்..

கோவை அருகே உள்ள பேரூர் படித்துறை பகுதியில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் பாலக்காட்டை சேர்ந்த 55 மதித்தக்க ஒருவர் இன்று காலையில் பேரூர் படித்துறையில் திதி கொடுத்துக் கொண்டிருக்கும் போது திடீர் மாரடைப்பால் காலபைரவர் சன்னிதியில் மயங்கி விழுந்து இறந்தார். பேரூர் கோவிலில் பக்தர் உயிரிழந்ததன் காரணத்தால் கோவில் நடை இன்று மூடப்பட்டது.