காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீர் மாயம் – கணவர் புகார்..!

கோவை சரவணம்பட்டி கஸ்தூரிபாய் சூப்பர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் முகமது வெசிட் (வயது 23) இவரது மனைவி மஞ்சுளா( வயது 22) இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் .கடந்த 4-ந் தேதி மஞ்சுளா கொடைக்கானலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பெற்றோர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கணவர் முகமது வெசிட் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார் . இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..