சூலூரில் வாக்கு சேகரித்த மக்கள் அவை உறுப்பினர் கனிமொழி.!!

நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் கணபதி ராஜ்குமார் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரிப்பதற்காக கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி சூலூர் தொகுதிக்குட்பட்ட மக்களை நேரிலே சந்தித்து உதய சூரியன் சின்னத்துக்கு தங்களின் வாக்குகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் . மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இதுதான் கடைசி தேர்தல் இனி மக்களாட்சி நடைபெறாது . ஆகவே பொதுமக்கள் வளர்ச்சிக்கும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் போட்டிக்கும் இந்திய கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்..