கோவை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு..!

கோவை விமான நிலையத்திற்கு வெளிநாடு, உள்ளூர் என தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அரசியல் கட்சியிர் அமைச்சர்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை விமான நிலையம் வந்தார். அதே விமானத்தில் பாமக தலைவர் அன்புமணி தலைவரும் வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது விமான நிலையத்தில் கேட்பாரற்ற மர்ம பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கிடப்பது தெரியவந்தது. இதனால் சந்தேமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பெட்டியை சோதனை செய்தனர். இதையடுத்து கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியை பாதுகாப்பு படை வீரர் உள்ளே எடுத்துச் சென்றார். நீண்ட நேரமாக விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.