அபாய சங்கிலியை பிடித்து இழுத்த மர்ம நபர்.. நடுவழியில் நின்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயில்..!

கோவை: சென்னையில் இருந்து கோவைக்கு வரும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 7:45 மணிக்கு காட்பாடி அருகே உள்ள முகுந்தாபுரம் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டி 9 முன்பதிவு பெட்டியில் இருந்த பயணி யாரோ ஒருவர் திடீரென்று அபாய சங்கலியை பிடித்து இழுத்தார். இதனால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. உடனடியாக என்ஜின் டிரைவர்கள் அந்த பெட்டியில் சென்று விசாரித்தனர் . அப்போது அங்கிருந்த பயணிகளில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது யார் ?என்பது தெரியவில்லை என கூறினார்கள். .இதனால் ரயில் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இது குறித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..