10 -ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கோவை வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை இடையர்பாளையம் பிரிவு தடாகம் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் மாதவன் ( வயது 23) மெக்கானிக். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 12 -11- 20 20 அன்று மாதவன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றார். பின்னர் அந்த சிறுமியை கோவைக்கு கடத்தி வந்தார். அவரது வீட்டில் வைத்து அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் .இது குறித்த புகாரின் பேரில் மணியாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மாதவனை கைது செய்தனர் .இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகளிர் நீதிமன்றம் மற்றும் கூடுதல் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் குற்றம் சாட்டப்பட்ட மாதவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசின் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இழப்பீட்டு நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்..