மனைவியை தாக்கி 53 பவுன் நகை, ரூ 1 லட்சம் பணம் பறித்த கணவர் தலைமறைவு – இளம்பெண் பரபரப்பு புகார்..!

கோவை சரவணம்பட்டியில் உள்ள அம்புலி நகரை சேர்ந்தவர் சாய் கிருஷ்ண பிரசாத். இவரது மனைவி ரம்யா ( வயது 34 )இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.ரம்யா தான் சம்பாதிக்கும் பணத்தை கோவையில் வீடு வாங்குவதற்காக தனது கணவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார் .அந்த பணத்தில் சாய் கிருஷ்ணபிரசாத் தனது மனைவிக்கு தெரியாமல் தன் பெயருக்கு அப்பார்ட்மெண்டில் ஒரு வீடு வாங்கினார்.இது அவரது மனைவி ரம்யாவுக்கு தெரிய வந்தது. எனவே இது பற்றி அவரிடம் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சாய் கிருஷ்ண பிரசாத் அவரது மனைவி ரம்யாவை தாக்கி 53 பவுன் நகைகள், ரூ 1லட்சம் பணம், பாஸ்போர்ட் ஆகியவற்றை அபகரித்து கொண்டு எங்கோ தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரம்யா கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் தவலத்நிஷா இது தொடர்பாக விசாரணை நடத்தி,மோசடி வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கணவர் சாய் கிருஷ்ணபிரசாத்தை தேடி வருகிறார்.