கோவை கல்லூரி அருகே 126 கிலோ குட்கா, கார் பறிமுதல் – பெண் வியாபாரி உட்பட 2 பேர் கைது..!

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் முத்து இருளப்பன் ஆகியோர் துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினார் .அங்கு தடை செய்யப்பட்டு குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 126 கிலோ குட்கா, ஒரு பைக், ஒரு கார், பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் ( வயது 33 )வி.கே. ரோட்டை சேர்ந்த கண்ணன் மனைவி மனோரஞ்சிதம் ( வயது 38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குழந்தை ராஜு தப்பி ஓடிவிட்டார்.இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..