எனக்கு பசிக்கிறது.. என தப்பி ஓடிய வெளிநாட்டு கைதி… மடக்கி பிடித்த போலீசார்..கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு.!!

கோவை: ரஷ்யாவை சேர்ந்தவர் பெர்லின் ஷெரில் ( வயது 38 )இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார் .இந்த நிலையில் போலீசார் அவரை விசாரணைக்காக ஆஜர்படுத்த கோவையில் உள்ள  நீதிமன்றத்திற்கு நேற்று காலை அழைத்து வந்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி இருந்தனர். பிற்பகல் 2 மணி அளவில் அவர் பசி எடுப்பதாக கூறினார். இதையடுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் குறியாக இருந்தனர். இதனால் நீதிமன்றத்தில் இருந்து திடீரென போலீஸ்காரர்களை தள்ளி விட்டு பெர்லின் ஷெரில் தப்பி ஓடினார். போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் உள்ள ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது..