பழகுவதை நிறுத்திய ஆத்திரத்தில் வீடு புகுந்து கள்ளக்காதலியை தாக்கிய பெயிண்டர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்த 28 வயது
இளம்பெண். கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து இளம்பெண்ணுக்கு நேருநகரை சேர்ந்த பெயிண்டர் கார்த்தி (வயது
27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு
ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் கார்த்தியுடன் பேசுவதையும் பழகுவதையும்
தவிர்த்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இளம்பெண் தனியாக இருந்தார். வீட்டிற்குள் கார்த்தி
அத்துமீறி நுழைந்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது கள்ளக்காதலியை தாக்கி கொலை மிரட்டல்
விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார். தாக்குதலில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தது. பழகுவதை நிறுத்திய கள்ளக்காதலியை வீடு புகுந்து தாக்கிய கார்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.