கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாப பலி..

கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கம் உள்ள இக்கரை போளுவாம்பட்டி ராஜாஜி வீதியைச் சேர்ந்தவர் சின்னதுரை ( வயது 60) விவசாயி. இவர் நேற்று அங்குள்ள சுந்தரசாமி என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே நடந்து சென்றார் . அப்போது திடீரென்று தவறி கிணற்றினுள் விழுந்தார். அதே இடத்தில் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கபட்டது. அவர்கள் உடலை மீட்டு ஆலாந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..