80 போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞர் கைது..!

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கடாபுரம் சேர்ந்தவர் ஹரிஹரன் ( வயது 19 )இவர் தடாகம் ரோட்டில் தனது நண்பர்கள் தட்சிணாமூர்த்தி, அக்சய் ஆகியோருடன் சேர்ந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த சாய்பாபா காலனி போலீசார் நேற்று மாலை அங்கு ரோந்து சென்றனர். அப்போது போதை மாத்திரை விற்பனை செய்த ஹரிகரனை மடக்கிபிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது நண்பர்கள் தட்சிணாமூர்த்தி,அக்சய் ஆகியோரை தேடி வருகிறார்கள்..