பைக்கில் கஞ்சா கடத்தி வந்த இளைஞர் கைது..!

கோவை- திருச்சி ரோட்டில் இருகூர் பிரிவு பஸ் ஸ்டாப் அருகே சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்த ஒரு ஆசாமியை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 1,600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சிங்காநல்லூர், கக்கன் நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் சூரிய பிரகாஷ் ( வயது 19) என்பது தெரிய வந்தது.கஞ்சாவும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது .அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..