விடுதியில் தங்கி படித்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

விடுதியில் தங்கி படித்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி திடீர் மாயம்..!  தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய காண்டீபன்.இவரது மகள் தீபிகா (வயது 20) இவர் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ.இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்..நேற்று முன்தினம் ஊருக்கு செல்வதாக விடுதியில் கூறிவிட்டு சென்றவர் வீட்டுக்கு செல்லவில்லை. விடுதிக்கும் திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தந்தை விஜய காண்டீபன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.