கோவையில் குட்கா வேட்டை ஒரே நாளில் 23 வியாபாரிகள் கைது..!

கோவையில் குட்கா வேட்டை ஒரே நாளில் 23 வியாபாரிகள் கைது..!கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா போதை மாத்திரை அறவே இல்லாத ஒழிக்க போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகிறார்கள்.கோவை மாநகர் முழுவதும் நேற்று ஒரே நாளில் நடந்ததிடீர் சோதனையில்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்காவை மறைத்து வைத்து விற்பனை செய்ததாக கெம்பட்டிகாலனி கணபதி கைது செய்யப்பட்டார். இதே போல ஜி எம் நகர் பகுதி முஹம்மத் தாஹிர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்..மேலும் நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா விற்றதாக மல்லிகா , பழனியப்பன் , ஐயப்பன் ,சங்கர், முஸ்தாக் குழந்தை ராஜு,|பிரேமா . சரவணன் ,ராயப்பன் , ராஜமாணிக்கம் , மகாராணி , யோகேஷ் , உட்பட 23 வியாபாரிகள்கைது செய்யப்பட்டனர்.500க்கும் மேற்பட்ட குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.