தற்கொலைப்படை தாக்குதலால் சோகத்தில் மூழ்கிய பாகிஸ்தான் மக்கள்-பலி எண்ணிக்கை 32-ஆக உயர்வு..!

பாகிஸ்தானில் மசூதி குண்டுவெடிப்புக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் மதியம் தொழுகை நேரத்தின்போது பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் அந்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குண்டுவெடிப்பு நடந்தபோது மசூதி உள்ளே சுமார் 260 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 147 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த பயங்கர சம்பவம் பாகிஸ்தான் மக்களை பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மேலும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.