மனைவி ஓட்டிச் சென்ற கார் பஸ் மீது மோதி விபத்து : கணவர் பலி – மனைவி மீது வழக்குப்பதிவு..

கோவை : பொள்ளாச்சி மகாலிங்கபுரம் வி கே. வி. லே அவுட்டை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 73) தொழிலதிபர். இவரது மனைவி சாந்தி ( வயது 64) இவர்கள் இருவரும் நேற்று காரில் பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.காரை மனைவி சாந்தி ஓட்டினார்.கணவர் ஆனந்த ராஜ் முன் சீட்டில் உட்கார்ந்து இருந்தார். கோட்டூர் அருகே சென்றபோது அந்த வழியாக சென்று கொண்டிருந்த அரசு பஸ்சின் பின்பகுதியில் கார் மோதியது . இதில் முன் சீட்டில் இருந்த ஆனந்தராஜ் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த மனைவி சாந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.