புரோட்டா வாங்க சென்ற பட்டதாரி வாலிபருக்கு அடி, உதை – கோவை ஹோட்டல் உரிமையாளர் கைது..!

கோவை அருகில் உள்ள சுண்டக்காமுத்தூர் பி .என். டி .காலனி சேர்ந்தவர் சிவகுமார் .அவரது மகன் அருண் (வயது 22) பி.பி.ஏ.பட்டதாரி. சரவணம்பட்டியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார் நேற்று இவர் கோவை புதூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு புரோட்டா வாங்க சென்றார். 8 புரோட்டாவுக்கு ஆர்டர் கொடுத்தார்.பின்னர் அவர்கள் கொடுத்த பார்சலை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்த போது அதில் புரோட்டா எண்ணிக்கை குறைவாக இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கோவை புதூரில் உள்ள அந்த ஓட்டல் அதிபர் சத்ராக்கிடம் ( வயது 22)கேட்டார். அப்போது அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் அடைந்த சத்ராக், ராஜா சந்திரன் ஆகியோர் சேர்ந்து அருணை, கைகளாலும் இரும்புநாற்காலியால் தாக்கினார்கள்.இதில் அருண் படுகாயம் அடைந்தார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார் .இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டல் அதிபர் சத்ராக் (வயது 22) ராஜா சந்திரன்’ ( வயது 32 )ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.