சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த ஆசிரியர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்..!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக கோவை ஆனைகட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த நபர் பாலியல் குற்றவாளி என உறுதி செய்து அந்நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, அந்த நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின்படி போக்சோ வழக்கு குற்றவாளியான ஆறுமுகம் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்து உள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 4 போக்சோ குற்றவாளிகள் உட்பட 14 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.