ரேஷன் கடை பெண் ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், இவரது மனைவி வெங்கடேஸ்வரி( வயது 57 )இவர் பீளமேட்டில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது வீட்டில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ 73 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வெங்கடேஸ்வரி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.