வீடுபுகுந்து 70 வயது மூதாட்டியை தாக்கி மானபங்க முயற்சி.வட மாநில தொழிலாளிக்கு வலை…

கோவில் பீளமேடு, தண்ணீர் பந்தல், ராமசாமி நகரைமனோகரன். இவரது மனைவி ரேவதிபாய் (வயது 70) ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டுக்குள் ஒரு ஆசாமி நுழைந்தான்.அவன் ரேவதிபாயிடம் குடிக்க தண்ணீர் கேட்டான். அவர் தண்ணீர் எடுக்க சென்றபோது அந்த ஆசாமி பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்று ரேவதிபாயை பிடித்து கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்து, மானபங்கம்செய்ய முயன்றானாம்.உடனே மூதாட்டி சத்தம் போட்டார் .அதற்குள் அந்த சாமி தப்பி ஓடி விட்டான் .இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்துஅதே பகுதியில் வேலை செய்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லாஜி என்ற ராஜ்கபூர் (வயது 34 என்பவரை தேடி வருகிறார்கள்.இவன் மீது கொலை மிரட்டல், மாபைங்க முயற்சி உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.