தமிழ்நாடு முழுவதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 48 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி கோவை மாநகர தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த சண்முகம் காஞ்சிபுரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நெல்லை மேற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வரும் சரவணகுமார் கோவை தெற்கு பகுதி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் இதேபோல கோவை மாநகர் வடக்கு பகுதி போலீஸ் துணைகமிஷனராக பணியாற்றி வந்த சந்தீஷ் ராமநாதபுரம் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சேலம் சரக டி.ஐ.ஜி. யாக உமா நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை அரசு செயலாளர் அமுதா நேற்று பிறப்பித்தார்.
Leave a Reply