கோவை டைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து – ரூ. 87 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்.!!

கோவை பொன்னையராஜபுரத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் பியூஸ். ஆர். டேட்டட் (வயது 37 ) இவர் ஆர். எஸ். புரம், பூ மார்க்கெட் பக்கம் உள்ள தேவாங்கப்பேட்டை ரோட்டில் ” டைல்ஸ்” கடை நடத்தி வருகிறார் கடந்த 28ஆம் தேதி இரவில் இவரது கடையில் இருந்து திடீரென்று புகை வந்தது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணைத்தனர். இதில் கடையில் இருந்த ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது .இது குறித்து ஆர் .எஸ் . புரம். போலீசில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.