தாய் திட்டியதால் விபரீதம்… பிளஸ் 1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை..

கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம் சக்தி நகரை சேர்ந்தவர் சரவண சிதம்பரம். இவரது மகன் நிதின் பழனியப்பன் (வயது 17) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார் .இவர் நேற்று பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. இதை அறிந்த தாயார் இவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நிதின் பழனியப்பன் டி.வி.எஸ். நகர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு விட்டத்தில் சால்வையை கட்டி தூக்கில் தொங்கினார். இதை பார்த்த இவரது பாட்டி சத்தம் போட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து மாணவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வழியில் நிதின் பழனியப்பன் இறந்துவிட்டான். இது குறித்து அவர் தந்தை சரவணசிதம்பரம் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..