வங்கி அதிகாரி வீட்டில் பயங்கர தீ விபத்து – ரூ 5. லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

கோவை சிட்கோ வஉசி காலனியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) இவர் சேலம் சிண்டிகேட் வங்கியில் தலைமை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.கடந்த 17ஆம் தேதி இவர் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று விட்டார். அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டார்.வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்து பக்கத்து வீட்டார் தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீ மளமளவென பரவியது.இதில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், வங்கி புத்தகம், செக் புத்தகம் பாஸ்போர்ட், ஆதார்கார்டு, வீட்டு உபயோகப் பொருட்கள் 2இருசக்கர வாகனம் , 3 கேஸ் சிலின்டர் எரிந்து சேதமடைந்தது..தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.