கோவை பஸ்சில் தொழிலாளிடம் ரூ 29 ஆயிரம் அபேஸ்..!

கோவை அருகே உள்ள வடவள்ளி, பாரதியார் நகர், மகாராணி அவென்யூவை சேர்ந்தவர் காசிராஜன் (வயது 62)|கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காந்திபுரம்- புலுவாம் பட்டி தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். செல்வபுரம் அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்றபோது இவரது சட்டை பையில் இருந்தபணம் 29 ஆயிரத்து 500 ரூபாயை காணவில்லை . யாரோ பஸ்சில் வைத்துதிருடி விட்டனர். இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.