கோவை ஓட்டலில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..

கோவை பேரூர் செட்டிபாளையம் ரோஜா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 37). இவரது மனைவி சுபா (34). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜ்மோகன் சிலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கோபித்து கொண்ட ராஜ்மோகன் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டிற்கு வந்தார். அங்கு ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அங்கு கடன் வாங்கியதை நினைத்து மன வேதனை அடைந்தார். பின்னர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.