தாராபுரம் புதிய தாசில்தார் பதவி ஏற்பு..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், புதிய தாசில்தாராக, காங்கயம் கலால் மேற்பார்வை அலுவலராக பணியாற்றி வந்த கோவிந்தசாமி, தாராபுரம் தாசில்தாராக நேற்று புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல ஏற்கனவே தாராபுரம் தாசில்தாராக இருந்த ஜெகஜோதி, தற்போது தாராபுரம் கோட்ட கலால் அலுவலராக பணி மாறுதல் பெற்றார். இன்று பொறுபேற்று கொண்டார்.
புதிய தாசில்தார் கோவிந்தசாமியை கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம ஆய்வாளர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்..