கோவையில் தெரு நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொலை – போலீசார் விசாரணை..!

கோவை இடையர்பாளையம், சக்தி முருகன் நகர் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிந்தன. இந்த நாய்களுக்கு யாரோ மர்ம நபர்கள் விஷம் கலந்த உணவு பொருட்களை கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டு சில தினங்களாக அடுத்தடுத்து ஆங்காங்க தெரு நாய்கள் செத்துக் கிடந்தன. இதற்கிடையே நேற்று அந்த பகுதியில் ஒரு நாய் உயிரிழந்த நிலையிலும் மற்றொரு நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதையறிந்த பொதுமக்கள் போராடிக் கொண்டிருந்த நாயை காப்பாற்று நோக்கில் உடலில் தண்ணீர் ஊற்றியும், வயிற்றை அழுத்தி விஷம் கலந்த உணவை வெளியே எடுத்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.