தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண் இன்று கோவை வருகை..!

கோவை  தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆக பதவி வகித்து வருபவர் அருண். இவர்இன்று மதியம் 1:30 மணி விமானத்தில் கோவை வந்தார்.விமான நிலையத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.அவரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.இன்று மாலை 3:30 மணிக்கு கோவை மேற்கு மண்டல போலீஸ்ஐ.ஜி அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ஐஜி பவானிஸ்வரி,டி ஐ ஜி சரவணன் சுந்தர் மற்றும் துணை போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்.இன்று இரவு கோவையில் தங்குகிறார் .நாளை 11 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறார்.