அரசு பொருட்கள் திருட்டு – 2 பேர் கைது..!

கோவை மாவட்டம் வால்பாறை ஆயர்பாடி,கருமலை ரோட்டில் 40வது கொண்டை ஊசி வளைவில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இரும்பு பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அதை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து உதவி பொறியாளர் பிரகாஷ் வால்பாறை போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் வழக்கு பதிவு செய்து வால்பாறை முதல் டிவிசனைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 50) வாழைத் தோட்டத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் ( வயது 31 )ஆகியோரை நேற்று கைது செய்தார். இருவரும் இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளனர். 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.