நடத்தையில் சந்தேகம்… மனைவி தூக்கு போட்டு தற்கொலை.. 

நடத்தையில் சந்தேகம்… மனைவி தூக்கு போட்டு தற்கொலை..  கோவை அருகில் உள்ள தெலுங்கு பாளையம் ஆறுமுகம் உடையார் வீதியை சேர்ந்தவர் மனோகரன் .தனியார் நிறுவன ஊழியர், இவரது மனைவி கல்பனா ( வயது 38)இவரது நடத்தையில் கணவர் மனோகரன் சந்தேகப்பட்டார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் நேற்று இரவு படுக்கை அறையில் கணவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரது மனைவி சுடிதார் துப்பட்டாவை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கணவர் மனோகரன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.