காதல் தோல்வி… வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை ரத்தினபுரி முத்துக்குமார் நகரை சேர்ந்தவர் சரவணன் இவரது மகன் பிரவீன் குமார் ( வயது 28) இவர் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.இந்த நிலையில் அந்த பெண் மற்றொருவரை திருமணம் செய்ய அவரது வீட்டில் சம்மதம் தெரிவித்தார்.இது பிரவீன் குமாருக்கு தெரிய வந்தது.இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரவீன் குமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவர் தாயார் புவனேஸ்வரி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். சிறப்பு இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..